Thursday, April 16, 2009

காதல் தந்த பரிசு 4

திவ்யா எதிர்பார்த்ததை விட சர்வின் அவள் மேல் மிகுந்த பாசத்துடன் இருந்தான். இது அல்லவா காதல் என பார்பவர்களின் மனதில் பொறாமையை துண்டியது. திவ்யாவுக்கு தாயில்லாத ஏக்கம் இப்பொழுது சிறிதும் தோன்றுவதில்லை. சுருக்கமாக சொல்ல போனால் சர்வின் அவளுக்கு ஒரு தாயை போல பார்த்துக் கொள்கிறான். தாயிடம் இருக்கும் பாசம்,அக்கறை, கண்டிப்பு என அனைத்தையும் அவனிடம் கண்டாள். அன்று இரவு தான் தாயை பார்க்க அழைத்து போவதாக சொல்லி இருந்தான்.
" Dear,are you ready?"
" Ya,i am ready,can we go."

இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். திவ்யாவும் பேசிக் கொண்டே வந்தாள். அவள் பேசுவதை கேட்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். காரணமே தெரியாது. சர்வினின் வீடும் வந்தது. திவ்யாவும் பய உணர்வோடு விட்டினுள் சென்றாள். அங்கு இவர்களின் வருகைக்காக காத்திருந்தார் திருமதி பார்வதி. கணவனை சிறு வயதிலையே இழந்து, சர்வினை மிகவும் அன்போடு வளத்தவர்.
" வாம்மா ஏன் இவ்வளவு நேரம்."
" கொஞ்சம் லேட் ஆச்சு ஆன்டி."என்றாள்.
" பரவாயில்லை" என்றார் பார்வதி.
இரவு உணவும் அங்கேயே முடிந்தது. பேசிக் கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. நேரமும் 9 ஆனது. இருவரையும் வழி அனுப்பிவைத்தார்.
" சர்வின் என் மருமகளை பார்த்து அழைத்து செல், வேகமாக போக வேண்டாம்" என்று மகனுக்கு செல்ல அறிவுரையை கூறினார்.
" சரி அம்மா." என்று இருவரும் கிளம்பினார்கள்.
************************************************

காரில் இருவரும் ஒன்றும் பேசவில்லை. திவ்யா பாடலில் முழ்கி விட்டாள். சார்வினும் தான். அவளின் வீடும் வந்தது.
"So shall we go back now" திவ்யா.
" Hey, why you go back so early."
" Hello,sharvin time is already 9.30pm."
" Just chit-chat for a while baby."
" Hmmmm ok"

திவ்யா அவள் நண்பர்களை பற்றி கூறிக் கொண்டு இருந்தாள். சர்வின் அவள் பேசுவதையே ரசித்து கொண்டு இருந்தான். படபடவென பேசும் அவளின் குணம் அவன் மிகவும் ரசித்த ஒன்று என்று சொன்னால் மிகையாகது.
"சர்வின் நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணுற."
" நான் என் காதலியை ரசித்துக் கொண்டு இருக்கேன்."
" ம்ம்ம்ம் போ உனக்கு வேறு வேலையே இல்லை" என்று கதவை திறக்க சென்றாள்.

ஆனால் சர்வின் இதழோடு இதழ் முத்தம் கொடுத்தான். இதழோடு இதழ் சேர்ந்த நேரம் வார்த்தைகள் உமையானது. கண்கள் மட்டும் கோர்த்துக் கொண்டது. வெட்கம் கண்களில் தெரிந்தது. உடனே கதவை திறந்து ஓடினாள் திவ்யா. சிறு தூரம் சென்ற பிறகு சர்வினை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே விட்டினுள் சென்றாள்.

******************************************************

மறுநாள் திவ்யாவின் வீட்டிற்கு சர்வின் சென்றான். அப்பொழுது சர்வின் முதல் முதலாக அவளின் அப்பாவை சந்தித்தான்.
" வாப்பா சர்வின். உள்ளே வா" என்றார்"
சர்வின் வியப்புடன் உள்ளே சென்றான். என் பெயர் எல்லாம் எப்படி தெரியும்?
" திவ்யா உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்காள். நீ வருவேனு சொல்லி இருந்தாள். she just go out with her brother,don't worry she will come back in 10min."
" it ok uncle i'll wait for her"என்றான் சர்வின்.

இருவரும்
பேசிக் கொண்டே இருக்கையில் திவ்யாவின் அப்பா அவனை அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை சொன்னார். அவர் சொன்ன அந்த விஷயம் ஒரு கணம் அவனின் கண்களில் கண்ணீர் வர செய்தது. இவ்வளவு நாள் திவியாவுடன் பழகி ஏன் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லை. என்னை முழுதாக நம்பவில்லையோ? என்று மனதினில் சிறு குழப்பம் எழுந்தது. திவ்யாவும் அவள் அண்ணன் தேவாவும் வந்தனர்.
" வந்து ரொம்ப நேரம் ஆகுதா"என்றாள்.
" இல்லை இப்போ தான் வந்தேன் அப்பாவுடன் பேசிக் கொண்டு இருந்தேன்."என்றான்.
" ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு."
" nothing" என்றான். இருந்தாலும் மனதினில் குழப்பம் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளிடம் கேட்கலாமா இல்லை வேண்டாமா? என்று இன்னும் ஒரு குழப்பம். அவளின் சோகத்தை மீண்டும் நினைவுக்கூற வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ஆனாலும் அவனால் அதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டு சிறகடித்து பறக்கும் பறவைக்குள் இப்படி ஒரு சோகமா? எப்போதும் சந்தோசமாக இருக்கும், பிறரின் மனதை நோகாமல் பார்த்துக் கொள்ளும் அவளுக்கா அப்படி ஒரு வேதனை. அவனால் துளியும் நம்ப முடியவில்லை. அவனிடம் ஏன் சொல்லவில்லை இதுவும் புரியவில்லை.

தொடரும்....

23 comments:

Anbu said...

\\\சிறு தூரம் சென்ற பிறகு சர்வினை திரும்பி பார்த்து சிறிது கொண்டே விட்டினுள் சென்றாள்.\\\\



சின்ன திருத்தம்:-

சிறு தூரம் சென்ற பிறகு சர்வினை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே விட்டினுள் சென்றாள்.

Anbu said...

விரைவில் அடுத்த பதிவினை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

Anbu said...
This comment has been removed by a blog administrator.
வியா (Viyaa) said...

நன்றி அன்பு பிழையை திருத்தி கூறியதற்கு

வியா (Viyaa) said...

அடுத்த பகுதி விரைவில் எதிர் பாருங்கள் அன்பு

புதியவன் said...

கதையின் இந்தப்பகுதி யதார்த்தமான
உரையாடல்களுடன் ரொம்ப நல்லா இருக்கு...

ரொமாண்ஸ கூட அழகா சொல்லியிருக்கீங்க வியா...தொடருங்கள் வாழ்த்துக்கள்...

//இதழோடு இதழ் சேர்ந்த நேரம் வார்த்தைகள் உமையானது.//

“ஊமையானது”

FunScribbler said...

ஆஹா...கதை ரொம்ம சுவாரஸ்சியமா போகுது... அடுத்த பகுதிய உடனே போடுங்க:)

//Hey, why you go back so early."//

இதில் சிறு பிழை- hey, why do you want to go back so early?" என்று இருக்கனும்:)

//she just go out with her brother//

இதிலும்- she has just gone out with her brother.

//it ok uncle i'll wait for her"//

it is ok..என்று இருக்கலாம்.
சுட்டி காட்டியதை தவறாக நினைக்க வேண்டாம்:)

gayathri said...

nallairukupa kathai next part marupadium podunga

sakthi said...

hey nice ma

S.A. நவாஸுதீன் said...

கதை, தற்பொழுது அதன் முக்கியப் பகுதிக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நல்லது. தொடரட்டும் விரைவில் அடுத்த பகுதி.

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..
அடுத்த பகுதியை எதிர்பாருங்கள்

வியா (Viyaa) said...

எழுது பிழைகளை திருத்தியதற்கு நன்றி..உங்களை போலவர்களின் ஆதரவு தான் எனக்கு தேவை

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி

வியா (Viyaa) said...

thanx sakthi

வியா (Viyaa) said...

நவாஸ் நன்றி..அடுத்த பகுதி மிக விரைவில் வருகிறது..புதிய திருப்பத்துடன்

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

வியா (Viyaa) said...

:)...

gayathri said...

hai viya ungalu oru avord koduthu iruken en blogala vanthu paruga pa

அப்துல்மாலிக் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் வியா

உங்க எழுத்துக்களின் நடை அழகா இருக்கு

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி,என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..மீண்டும் மீண்டும் நன்றி

வியா (Viyaa) said...

வாழ்த்துகளுக்கு நன்றி அபு

Anonymous said...

super viyaa. kathai nalla erukku.

..சபரி.. said...

அருமை.. அருமை..