
எனது பயணங்கள்
உனது விழிகளில் தொடங்கியது..
இன்று..!
உன்னை நான் தொலைத்த
வேளையில்,என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது..
பள்ளியில் படித்த பாடத்தை விட
உன்னிடம்
காதல் பாடத்தை படித்ததே
அதிகம்.. இருந்தும்
காதல் என்னும் தேர்வில்
தோற்றது ஏனோ..?
உன் கரம் கோர்கையில்
நினைவுகள் ஆயிரம்..
நினைத்தாலே இனிக்கும்
தருணம்..
இது சோகமானாலும்
என் வாழ்க்கையின் தேடலில்
நெஞ்சுக்குள் ஒரு சுகம்..
இதயம் பேசும் என்
தனிமையான இரவுகளுடன்
என் காதலை
யாசிக்கிறேன்..!
தொடரும் நினைவுகளுடன்