Wednesday, July 22, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது


இந்த விருதை எனக்கு அளித்த காயத்திரி அக்கா அவர்களுக்கு நன்றி. நான் விருதை கொடுக்க நினைக்கும் சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்.நான் அடைந்த இந்த விருதை பிறரும்( என் சக நண்பர்களும்) அடைய வேண்டும் என்பதற்க்காக,இதனை அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன். நான் ரசித்து படிக்கும் சிலருக்கு இந்த விருதை அளிக்கிறேன்.

தூயா- http://thooya.blogspot.com/ இவரின் பதிவுகள் யாவும் அருமை. இவர் இந்த விருதை பெற தகுதியானவரும் கூட. இவருக்கு விருதை தருவது எனக்கு மகிழ்ச்சியே.

அன்பு- http://anbu-openheart.blogspot.com/ அன்பின் அன்பு இவரும் ஒரு நல்ல எழுத்தாளர் தான். அன்பின் பதிவுகளை படிக்க ஆர்வமாகவும் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் இருக்கும்.

ஸ்ரீமதி-http://karaiyoorakanavugal.blogspot.com/ ஸ்ரீமதி அப்பப்ப இவரின் கவிதைக்கு பதிலே இல்லை. அருமையாக கவிதை எழுதுவர். கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளது.

விருதை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


Tuesday, July 14, 2009

உன்னால்..


என் மனதை பறித்து
சென்றவன் அவனே..!
என் வாழ்க்கையை
உணர வைத்தவனே..!

உன்னால் என் மனதில்
பூத்தது புது உறவு..
உன் சின்ன சின்ன
பார்வை என்னுள்
காதலை ஏற்படுத்தியது..

உன்னை பார்த்தால்
சில நிமிடம் மௌனம்..
ஏன்? பூன்னகைகள்
பூத்து என் மனதை
ஆளுகிறாய் அன்பே..!

கனவில் வருடும்
என் காதல்
நிஜமானது உன்னால்..
உயிரின் ஓசை
கேட்க செய்தவன் நீயாடா..

மறுபடியும் பிறவி
எடுத்தேன் உன்னால்..
போதும் போதும் இந்த
காதல் ஏக்கங்கள் கண்ணே..!

இத்தனை சுகங்களும்
தந்தவனே...!!!
உன் உறவு எனக்கு
உயிரைப் போல..
உன் உறவு பிரிந்தால்
என் உயிரும் பிரியும்..

Saturday, July 11, 2009

உனக்காக ஒரு காதல்


பல மாற்றங்கள் கண்டு
வந்தேன்..அன்பே
உன் பெயரச் சொன்னாலே..
உன்னை காணும் நேரம்
என் கண்கள் ஏங்குகிறது..

நீ வேறு நான் வேறு
என்று சொன்ன மறுகணமே
நான் உயிர் இழந்தேன்..
இரண்டுகள் பழகியும்
இறுதியில் இரு மனம்
பிரிந்தது..

சின்னதொரு காரணத்தால்
பறவைப் போல்
சிறகடித்து சென்று விட்டாய்..

தினம் தினம் என்னை
தடுமாற வைக்கிறது
உன் நினைவு..

உனக்காக உயிர் வாழ்வேன்
உனக்கேன் தெரியவில்லை..
உனக்காக அழுகிறேன்
அதை நீ உணரவில்லை..!

Monday, July 6, 2009

பறக்கும் வண்ணத்துப்பூச்சி..

படபடவென இறக்கைகளை
அடித்துக் கொண்டு
சிட்டுகுருவிப் போல்
வானத்தில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியே..!

உன்னை போல வாழ
எனக்கு நீண்ட நாள்
ஆசை..

வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்..பெண்களை
கண்டால் ஏற்படாத
பொறாமை..உன்னை கண்டால்
மட்டும் ஏற்படுவது ஏனோ?

உன் வண்ணங்கள் சிதறி
பூக்கள் சினுங்குவதை விட
நான் சினுகுவது தான்
அதிகம்..

பூக்களிடம் மௌனத்தை
சேகரித்து நீ கொண்ட
காதல்..என் காதலை விட
புனிதமானது உன் காதல்..

உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!