Tuesday, August 25, 2009

என் காதலே..என் காதலே


உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..
ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டாய்..
சிலுவைகலாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!

நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடா..!

தொடரும் நினைவுகளுடன் உங்கள்..



Wednesday, August 12, 2009

கவிதைகள் சொல்ல வந்தேன் அன்பே..!


அர்த்தமின்றி முத்தம்
ஒன்று தந்தாயே..!
மேகத்தில் தவம்
கிடைக்கும் துளியாக
நான் காத்திருந்த
அந்த நொடி..!

உந்தன் புரியாத
உறவில் நான் கண்ட
சந்தோசம் வார்த்தைகளால்
சொல்ல இயலாது..!

கண்கள் உறங்காமல்
உன் நினைவுகள் என்னை
திண்டுகிறது..!
சிதறிய நினைவுகளை
எல்லாம் நீ தான்
என்னுள் சேமித்தாய்..
உன் நினைவுகளை
தவிர்க்க இன்று
போகாத தூரமில்லை..!

தனிமையில் நடந்து
செல்கிறேன்..என்
காலம் முழுதும் உன்னை
காதலிப்பேன்..இறக்கும் தருணம்
வரை உன் நினைவுகள்
என்னுள் தொடரும்..


எனது 100வது படைப்பு..இந்த கவிதை எனக்கு மிகவும் அர்த்தமுள்ள கவிதை.
தொடரும் நினைவுகளுடன் உங்கள்..