Tuesday, July 14, 2009

உன்னால்..


என் மனதை பறித்து
சென்றவன் அவனே..!
என் வாழ்க்கையை
உணர வைத்தவனே..!

உன்னால் என் மனதில்
பூத்தது புது உறவு..
உன் சின்ன சின்ன
பார்வை என்னுள்
காதலை ஏற்படுத்தியது..

உன்னை பார்த்தால்
சில நிமிடம் மௌனம்..
ஏன்? பூன்னகைகள்
பூத்து என் மனதை
ஆளுகிறாய் அன்பே..!

கனவில் வருடும்
என் காதல்
நிஜமானது உன்னால்..
உயிரின் ஓசை
கேட்க செய்தவன் நீயாடா..

மறுபடியும் பிறவி
எடுத்தேன் உன்னால்..
போதும் போதும் இந்த
காதல் ஏக்கங்கள் கண்ணே..!

இத்தனை சுகங்களும்
தந்தவனே...!!!
உன் உறவு எனக்கு
உயிரைப் போல..
உன் உறவு பிரிந்தால்
என் உயிரும் பிரியும்..

8 comments:

sakthi said...

கனவில் வருடும்
என் காதல்
நிஜமானது உன்னால்..
உயிரின் ஓசை
கேட்க செய்தவன் நீயாடா..

arumai

நட்புடன் ஜமால் said...

உன்னால் என் மனதில்
பூத்தது புது உறவு..
உன் சின்ன சின்ன
பார்வை என்னுள்
காதலை ஏற்படுத்தியது..\\

ஆஹா! ஆஹா!

பூத்தது புது உறவு - அருமை

வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்கு வியா.

வியா (Viyaa) said...

உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சக்தி..

வியா (Viyaa) said...

ஆஹா ஆஹா..
உங்களின் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜமால்..

வியா (Viyaa) said...

நன்றி அன்புமணி :)

gayathri said...

hai viyya

eb blogla unaku oru viruthu koduthu iruken parupa

Nathan said...

viyaa u r love failure..
soory for asking u...