Monday, December 7, 2009

என் உயிர் காதலே


துடிக்காத என் இதயத்தை
துடிக்க வைத்தவனே..
உயிரில்லா என் உடலுக்கு
காதல் உயிர் கொடுத்தவனே..
உன் மீது கொண்ட
காதலை ஜென்மத்திற்கும்
அழிக்க முடியாது..

காத்திருக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும் சுகமாய்
உணர்கிறேன்..உனக்காக
காத்திருப்பதால்..!
இமைகளை முடினால்,
கனவில் உன் முகம்..
என் இதயம் கொண்ட
காதலுக்கு கண்ணீர் மட்டும்
துணை..!

ரோஜா மலரை பறிக்கையில்
கைகளில் முட்கள் குத்தியது..
என் கைகளில் இருக்கும் ரோஜா
மலர்தான் தெரிந்தது..
உனக்கும் என் மனதில் இருக்கும்
வேதனை புரியவில்லை..

காத்திருப்பேன்
என் உயிர் காதலே..!


தொடரும் நினைவுகளுடன்,

8 comments:

S.A. நவாஸுதீன் said...

வலி தெரிகிறது வியா வரிகளில்

நட்புடன் ஜமால் said...

காத்திருங்கள் - காதல் வரும்.

பூங்குன்றன்.வே said...

//என் இதயம் கொண்ட
காதலுக்கு கண்ணீர் மட்டும்
துணை..!//

சோகம் தான் வியா.

/காத்திருப்பேன்
என் உயிர் காதலே..!//

காதலில் காத்திருப்பதும் ஒரு சுகமான சுமை தான்..வாழ்த்துக்கள் !!!

வியா (Viyaa) said...

வலியுடன் கூடிய காதல் எனது காதல் நவாஸ்

வியா (Viyaa) said...

கண்டிப்பாக காத்திருப்பேன் ஜமால்..
என் இனிய நினைவுகளுடன்

வியா (Viyaa) said...

வருகைக்கு நன்றி பூங்குன்றன்..
காத்திருப்பதும் சுகம் தானே..

SURYAJEEVA said...

kaathalichchu kai pidikkalainaa konja naal soagam...
kaathalichchu kalyaanam seithukittaa vaazh naal pooraa soagam...

சின்ன கண்ணன் said...

அருமையான வரிகள்
கா தல் தல்லாடுகிறது ...