Saturday, June 13, 2009

இதயத்தை திருடியவன்..


நொடிக்கொரு தருணம்
இறந்து பிறக்கும்
இந்த இதயத்தின் வலி
உந்தன் வருகையால்
ஏற்பட்டது..!

உன் காதலின்
ஆழத்தை கண்டேன்
மறுகணம் என்
கல்லான நெஞ்சில்
காதல் நீ
பற்றிக் கொண்டது..

பனி மலர்கள் நெஞ்சோடு
அணைத்துக் கொண்டது
போல் இருந்தது..
நீ என்னை அணைக்கும்
பொழுது..!

என்னிதயத்தை
திருடியவனும் நீயே..

15 comments:

நட்புடன் ஜமால் said...

திருடிட்டாங்களா! ...

வியா (Viyaa) said...

இன்னும் திருடவில்லை ஜமால்..
திருடிவிட்டால் சொல்லி விடுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

என்
கல்லான நெஞ்சில்
காதல் நீ
பற்றிக் கொண்டது..\\


கல்லா

மெய்யாலுமா

நட்புடன் ஜமால் said...

என்னிதயத்தை
திருடியவனும் நீயே..\\

எங்கு இருக்கார்


பனி மலர்கள் அழகு.

வியா (Viyaa) said...

கல்லான நெஞ்சு..ம்ம்ம்ம்
உண்மையா..பொய்யா..? தெரியவில்லை..

வியா (Viyaa) said...

தெரியவில்லை ஜமால்..
விரைவில் காண்பேன்..

sakthi said...

உன் காதலின்
ஆழத்தை கண்டேன்
மறுகணம் என்
கல்லான நெஞ்சில்
காதல் நீ
பற்றிக் கொண்டது..


ம்ம்ம்ம்


நடக்கட்டும்

sakthi said...

பனி மலர்கள் நெஞ்சோடு
அணைத்துக் கொண்டது
போல் இருந்தது..
நீ என்னை அணைக்கும்
பொழுது..!

அழகான உவமை

வியா (Viyaa) said...

என்ன சக்தி நடக்கட்டும்..
என் இதய திருடனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை

வியா (Viyaa) said...

எனக்கு பிடித்த வரிகளும் கூட சக்தி..

புதியவன் said...

இந்த மாதிரி கவிதைகளைத் தான்
உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன் வியா
கவிதைகள் திருடிவிடுகின்றன...

புதியவன் said...

//நொடிக்கொரு தருணம்
இறந்து பிறக்கும்
இந்த இதயத்தின் வலி
உந்தன் வருகையால்
ஏற்பட்டது..!//

மிக அழகான இறப்பும் பிறப்பும் வலியும்
வலிகளையும் சுகமாக்குவது காதலில்
மட்டுமே சாத்தியம்...

கவிதையை மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள் வியா...

வியா (Viyaa) said...

எப்படி புதியவன்
உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி விட்டதா..

வியா (Viyaa) said...

வாழ்த்துகளுக்கு நன்றி புதியவன்..
நிங்கள் கூறுவது உண்மையே,காதலில் மட்டுமே வலியுடன் சுகமும் உண்டு

Anonymous said...

கடலை விட்டு வந்தாலும்
கடலை சேரும் அலைபோல
உன்னை விட்டு சீறிகொண்டு பிறக்கும்
சண்டைகளும் பிரிவுகளும் என்னை
திரும்ப உன்னிடத்திலே சேர்க்கிறது

பெரியதாக ஒன்றும் தேவை இல்லை
உன் சந்தேகங்கள் போதும்
என்னை சாகடிக்க