Tuesday, March 31, 2009

காதல் தந்த பரிசு 1

அன்று ஒரு மாலை. அழகான மாலை நேரம், மழைக் காற்று காதோரம் கதை சொல்லி சென்றது. சிறிது நேரத்தில் மழைத்துளிகள் என் தேகம் முழுக்க முத்தமிட வந்தது. திடீர் என்று இடி இடித்து. பயத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சர்வினின் கைகளை இறுக்க பற்றி கொண்டேன். மயக்கும் மாலை பொழுது என்பர் இல்லை இல்லை. அவன் என்னை மயக்கிய மாலை பொழுது. அந்த மனம் மயக்கும் நேரத்தில் என் மனதையும்,பார்வையையும் அவனிடம் பறிக்கொடுத்தேன். அன்று தான் வைரமுத்துவின் "காதலித்து பார்" கவிதையை முழுதாக சுவாசித்தேன்.


சர்வினை ஒரு வருடமாக தெரியும். ஏனோ தெரியவில்லை முதல் சந்திப்பிலையே அவனுக்கு என் மீது காதல் மலர்ந்தது. அதை என்னிடம் சொல்லிய பொழுது எனக்கு அப்படி எந்த உணர்வும் உன்னிடம் தோன்றவில்லை என்று சொல்லி சர்வினின் காதலை மறுத்தேன். இருவரின் உறவும் நட்பாக தொடர்ந்தது. கடந்த ஒரு வருடத்தில் சர்வினின் பேச்சும்,செயல்களும் அவன் என்னிடம் கட்டிய அன்பு,பாசம்,காதல் இவையெல்லாம் என்னை அறியாமலே அவனை காதலிக்க செய்தது. என் காதலை முழுமையாக இந்த அந்தி சாயும் வேளையில் உணர்ந்தேன். யாரோ தோள்களில் கை வைத்தனர்.
"என்ன திவ்யா,ஒரே யோசனை. யோசனையா இல்லை கற்பனையா" என்று கிண்டல் அடித்தான்.
"அது எல்லாம் ஒன்றுமில்லை"மறுமொழி அளித்தேன்.
"அப்படினா can we go,it too late"என்றான்.
" போகலாமே".

தொடரும் ...

32 comments:

S.A. நவாஸுதீன் said...

சில்லென்று ஒரு காதலின் தொடக்கம்

S.A. நவாஸுதீன் said...

மயக்கும் மாலை பொழுது என்பர் இல்லை இல்லை. அவன் என்னை மயக்கிய மாலை பொழுது. அந்த மனம் மயக்கும் நேரத்தில் என் மனதையும்,பார்வையையும் அவனிடம் பறிக்கொடுத்தேன்.

காதலின் வரவு, காதலுக்கு மட்டுமே தெரியும். வந்தபின் தான் வீட்டுக்காரனுக்கே புரியும்

S.A. நவாஸுதீன் said...

"அது எல்லாம் ஒன்றுமில்லை"மறுமொழி அளித்தேன்.
"அப்படினா can we go,it too late"என்றான்.
"ஒ போகலாமே".

சீக்கிரம் திரும்பி வரவும்

நட்புடன் ஜமால் said...

மயக்கத்தின் நிலையை

துவக்கத்திலேயே!

அருமை

நட்புடன் ஜமால் said...

\\ஏனோ தெரியவில்லை முதல் சந்திப்பிலையே அவனுக்கு என் மீது காதல் மலர்ந்தது.\

அதெல்லாம் அப்படித்தான்.

Anbu said...

super

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

\\ஏனோ தெரியவில்லை முதல் சந்திப்பிலையே அவனுக்கு என் மீது காதல் மலர்ந்தது.\

அதெல்லாம் அப்படித்தான்.\\\

repeat

வியா (Viyaa) said...

சயேத் உங்களது கருத்துக்கு மிக்க நன்றி..ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு முதல் கதைக்கே இவ்வளவு ஆதரவா..! மீண்டும் சிக்கிரம் வருவேன்..காத்திருங்கள்

வியா (Viyaa) said...

ஜமால் கருத்துக்கு நன்றி..அந்த காதல் மயக்கத்தை எல்லாம் பொறுத்து இருந்து பாருங்கள்

வியா (Viyaa) said...

அன்பு எப்படி இருந்தது என் கதை..உங்கள் எதிர்பார்ப்புகள் புர்த்தியனத?

வியா (Viyaa) said...

நன்றி ஜோதிபாரதி

புதியவன் said...

காதல் தந்த பரிசின் ஆரம்பம் அழகாக வந்திருக்கு...தொடருங்கள் வியா...வாழ்த்துக்கள்...

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..காதல் தரும் பரிசை பாருங்கள்..

அ.மு.செய்யது said...

இது புனைவா ? இல்லை அனுபவமா ??

உண்மையை சொல்லுங்க...

( அழகா எழுதியிருக்கீங்க வியா..)

அ.மு.செய்யது said...

// வியா (Viyaa) said...
சயேத் உங்களது கருத்துக்கு மிக்க நன்றி..ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு முதல் கதைக்கே இவ்வளவு ஆதரவா..! மீண்டும் சிக்கிரம் வருவேன்..காத்திருங்கள்
//

அவரை நவாஸ் என்று அழையுங்கள்.

( எனக்கு ஒரே கொயப்பமா கீதுங்க )

வியா (Viyaa) said...

அமு செய்யுது..உண்மையை நான் இறுதியாக சொல்கிறேன்..
முதலில் என் கதையை படியுங்கள்.

வியா (Viyaa) said...

சரி அமு செய்யுது அவரை
நவாஸ் என்றே அழைக்கிறேன்

குடந்தை அன்புமணி said...

சொந்தக்கதையா நடத்துங்க... தொடரும்! தொடரத்தான் வேண்டும்!

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னங்க இது படிக்க வாயெக்கறதுக்குள்ள முடிஞ்சி போச்சு... கொஞ்சம் நெட்டையா தான் எழுதி போடுங்களேன் :)

வியா (Viyaa) said...

நன்றி அன்புமணி..இது சொந்தகதைய இல்லை கற்பனையா என்று இறுதியில் தான் சொல்லுவேன்

வியா (Viyaa) said...

உங்களின் வருகைக்கு நன்றி விக்கி..
அடுத்த முறை கதை நீளமாக தான் இருக்கும்

அனுபவம் said...

arumaiyilum arumai

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

வியா (Viyaa) said...

நன்றி அனுபவம்

ஊர்சுற்றி said...

என்னது உண்மை மாதிரியும் இருக்கு, கதை மாதிரியும் இருக்கு... அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...

ஏதும் ஏப்ரல் ஃபூல் இடுகை இல்லியே?!!!

Suresh said...

ஹ ஹ அருமையான காதல் கதை அதை விட உங்கள் எழுத்துக்கள் அருமை தோழி

வியா (Viyaa) said...

ஊர் சுற்றி..இது உண்மையா இல்லை கதையா என்று பொருத்து இருந்து பாருங்கள்..அடுத்த பகுதி நாளை வரும்

வியா (Viyaa) said...

நன்றி அன்பு தோழர் சுரேஷ்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஊர் சுற்றி..இது உண்மையா இல்லை கதையா என்று பொருத்து இருந்து பாருங்கள்..அடுத்த பகுதி நாளை வரும் //

இது சரி!

வியா (Viyaa) said...

:)

கடைக்குட்டி said...

//அவன் என்னை மயக்கிய மாலைப் பொழுது//

சூப்பர்.. ஸ்சூப்பர். ஸ்ஸ்சூப்பர்..(சுந்தரம் மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவும்..)

விஜய் டி.வி.பாப்பீங்கள்ல???

வியா (Viyaa) said...

நன்றி கடைக்குட்டி..
விஜய் டிவி பார்ப்பதில்லை..ஏன்?