Tuesday, March 17, 2009

ஆயிரம் எண்ணங்கள் 7


முடிவெடுத்தல்

முடிவெடுத்தல் என்பது உயிர் வாழும் கடைசி நிமிடம் வரை நடக்கும் ஒன்று. எந்த விஷயத்திலும் முடிவெடுத்தல் என்பது முன் அனுபவத்தின் அடிப்படையில் தான். வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,தடுமாற்றத்திற்கும் முடிவெடுத்தாலே காரணம். ஒவ்வொரு முடிவும் சரியென்று கருதியே எடுக்கப்படுகிறது. சில சரியாக அமைவதும் சிலவற்றில் பிரச்சனைகள் உருவாவதும் வேறு பல விஷயங்களில் பாதிப்பினால்.

முடிவெடுப்பது என்பது செயல் சார்ந்த விஷயம். முடிவெடுத்தல் என்ற சொல்லுக்கு சில காரணங்கள் எப்போதுமே தேவைப்படும். காரணமேயில்லாமல் ஒரு முடிவெடுக்க முடியாது. நாம் கற்றவையே நம் முடிவேடுத்தலின் பெரும் பங்கு வகிக்கிறது. கற்றவை தவிர, முடிவெடுக்க உதவும் இன்னொரு விஷயம் நம் ஆளுமை! ஆளுமை என்பது வெறும் குணங்களின் கூட்டுத்தொகை அல்ல, செயல்பாடுகளின் நிர்ணயமும் கூட. நம் ஆளுமை குறித்து தெரிந்துக் கொண்டால் பிறகு நாம் ஏன் முடிவெடுக்கிறோம்,எப்படி முடிவெடுக்கிறோம் என்பது நமக்கே விளங்கிவிடும்.

சிலருக்கு அவ்வளவு சிக்கிரம் முடிவெடுக்க முடியாது. இன்னும் சிலர் ஒரு விநாடியிலே முடிவெடுப்பார். நாம் முடிவெடுப்பதை பற்றி சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவருக்காக என்பதை விட முடிவு நமக்காக முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, நேற்று எடுத்த தவறான முடிவு குறித்து கோபமோ வருத்தமோ வளர்க்காமல்,நேற்றைய முட்டாள்தனம் கண்டு சிரிக்க பழக வேண்டும். பிறகு நாம் முடிவெடுத்த பின்பு ஒருபோதும் பின்வாங்குதல் கூடாது.

எப்போதும் நாம் பிறருக்காக என்ற போர்வையை போர்த்தி கொள்கிறோமே தவிர,உள்ளே நாம் மனதின் கண்ணாடியில் தெரியும் நம்மை நாம் அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் நம்மிடமே பொய் சொல்லக்கூடாது என்ற முடிவெடுக்க வேண்டும். இதன்பின் வாழ்க்கை சுலபமாகும்.

16 comments:

S.A. நவாஸுதீன் said...

ஒரு முடிவோடு ஆரம்பம். முழுசா படிச்சிட்டு என் முடிவ சொல்றேன்

அ.மு.செய்யது said...

//சிலருக்கு அவ்வளவு சிக்கிரம் முடிவெடுக்க முடியாது. இன்னும் சிலர் ஒரு விநாடியிலே முடிவெடுப்பார். நாம் முடிவெடுப்பதை பற்றி சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். //

உண்மை தான்..

எங்கோ படித்த ஒரு மேற்கோள்:

நாம் எடுத்த முடிவு சரியாகத் தானிருக்கும்.

ஆனால் அந்த முடிவுக்கு வந்ததற்கான காரணங்கள் பல நேரங்களில் தவறாக இருக்கும்.

அ.மு.செய்யது said...

ஆழ்ந்த கருத்துகள் நிறைந்த பதிவு வியா...


அருமை !!!!!!!

S.A. நவாஸுதீன் said...

சில நேரங்களில், சூழ்நிலை சரியில்லை இப்ப எந்த முடிவும் எடுக்க வேணாம்னு சொல்லி ஒரு முடிவு எடுக்கிறோமே அப்படி சொல்றது ஒரு முடிவுதானே. முடிவு எடுக்க முடியாமல் குழம்புகிறேன்

வியா (Viyaa) said...

கண்டிப்பாக சயேத்
உங்களின் முடிவுக்கும் கருத்துக்கும் நான் காத்திருப்பேன்

வியா (Viyaa) said...

நன்றி அமு செய்யுது..
சில நேரங்களில் முடிவெடுத்தல் மிகவும் கடினமா ஒன்று..
எனக்கும் இது போன்று உண்டு..

S.A. நவாஸுதீன் said...

நிச்சயமாக நீங்கள் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை. முடிவு எடுப்பது முக்கியமல்ல, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது முக்கியம் என்பதை நன்கு உணர்த்துகிறது

வியா (Viyaa) said...

சயேத் ஏன் இப்படி ஒரு குழப்பம்..
முடிவெடுக்க பயம் வேண்டாம்..

வியா (Viyaa) said...

உங்களுக்கு எனது நன்றி சயேத்..

S.A. நவாஸுதீன் said...

எப்போதும் நாம் பிறருக்காக என்ற போர்வையை போர்த்தி கொள்கிறோமே தவிர,உள்ளே நாம் மனதின் கண்ணாடியில் தெரியும் நம்மை நாம் அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சத்தியமான வார்த்தைகள்.

நட்புடன் ஜமால் said...

\\காரணமேயில்லாமல் ஒரு முடிவெடுக்க முடியாது. நாம் கற்றவையே நம் முடிவேடுத்தலின் பெரும் பங்கு வகிக்கிறது. கற்றவை தவிர, முடிவெடுக்க உதவும் இன்னொரு விஷயம் நம் ஆளுமை! \\

அழகா

ஆழமா சொன்னீங்க ...

புதியவன் said...

//மற்றவருக்காக என்பதை விட முடிவு நமக்காக முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். //

உண்மை தான் பொதுவாக நாம் நமக்காக முடிவெடுப்பதை விட பிறருக்காக முடிவெடுப்பது தான் அதிகம்...நல்ல எண்ணங்கள் வியா...

Anonymous said...

கலக்கறிங்க வியா உண்மையிலயே ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க.

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..
உண்மையாக தான் ஆளுமை இன்னொரு காரணம்..இதை புரிந்துக் கொண்டால்
வாழ்க்கை அழகானது..

வியா (Viyaa) said...

பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்க கூடிய ஒன்று தான் அது புதியவன்..நம் வாழ்கையிலே ஏற்பட்டு இருக்கலாம்..
என்று ஒருவர் தனக்காக முடிவெடுக்க ஆரம்பமாகிறதோ அன்றே அவன் வாழ்க்கையில் பாதி வெற்றி அடைந்து விட்டான்

வியா (Viyaa) said...

நன்றி மகா