Tuesday, February 17, 2009

கற்பனையில் கவிதை

காதல்..
உணரவில்லை உன்னை
காதலிக்கும் வரை!
வலி..
உன்னை காதலிக்கும் போது
ஏற்பட்ட மனக்காயம்!
எதிர்பார்ப்பு..
உன் தரிசனம் எனக்கு
கிடைக்காத என்று!
தவிப்பு..
உனக்கு வேறு உறவு
இருக்குமோ என எண்ணி!
சஞ்சலம்..
நீ மற்றவர்களோடு
பேசும் போது!
சுயநலம்..
நீ எனக்கு மட்டும்
என்று நினைக்கும் போது!
காத்திருப்பேன்..
நீ என்னிடம் வந்து
சேரும் வரையில்!

8 comments:

தமிழ் said...

அருமையான வரிகள்

வியா (Viyaa) said...

நன்றி..
திகழ்மிளிர்

புதியவன் said...

//உணரவில்லை
உன்னை
காதலிக்கும் வரை!//

அருமை...

//சுயநலம்..
நீ எனக்கு மட்டும்
என்று நினைக்கும் போது!//

இது முற்றிலும் உண்மை...

சிறிய கவிதைகளாய் இருந்தாலும் அழகு...

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்
உண்மை தானே நான் சொன்னது யாவும் ?

குடந்தை அன்புமணி said...

காதலுக்குள் சுயநலமிருக்கலாம் தப்பே இல்லை.

அசோசியேட் said...

அழுத்தமான ஆனால் அழகான வரிகள்.

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

priyamudanprabu said...

//உணரவில்லை
உன்னை
காதலிக்கும் வரை!//

அழகான வரிகள்

//சுயநலம்..
நீ எனக்கு மட்டும்
என்று நினைக்கும் போது!//

அடடா