Tuesday, February 10, 2009

துடிக்கும் இதயம்

உன்னை பார்த்த பின்பு
இப்பொழுது பொய்கள்
கூட எனக்கு
பொழுது போக்காக
ஆகிவிட்டது..

காதலியே!
அனைத்தையும் மறக்கும்
என் இதயம் உன்னை
மட்டும் மறக்க
முடியவில்லை..
வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும்
என்று உன்னால் நான்
அறிந்துக்கொண்டேன்.

மிக்க நன்றி
இந்த காதலின் வலியையும்
வேதனையையும்
உன் நினைவாக என்னிடம்
விட்டு சென்றதற்கு..
இந்த உலகமே
அழிந்தாலும் என் காதல்
அழியாது..ஆருயிரே!

4 comments:

அ.மு.செய்யது said...

அழகாக எழுதியிருக்கிறீர்கள் வியா...

தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

நான் said...

உணர்வுகள் புரிகிறது மறப்பது நன்று

Mohan R said...

'வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும்
என்று உன்னால் நான்
அறிந்துக்கொண்டேன்.'

உண்மை தான்

கிருஷ்ணா said...

வாழ்க காதல்! வளர்க கவித்துவம்!!
வாழவைக்கும் தமிழ்!!!