Tuesday, January 13, 2009

அன்பு காதலன்


ஏன் இந்த வாழ்கையில்
இத்தனை மாற்றங்களும்
சாபங்களும்
..?
நான் கடந்து
வந்த பாதையை
திடீர் என்று திரும்பி
பார்த்தேன்

என்னுடன்
யாரும் வரவில்லை
உன்னையும் உன் நிழலையும்
தவிர..

கனவா இல்லை நினைவா
என தெரியவில்லை..
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்..
என்
ஆயுள் முடியும்
வரை
தொடர்ந்து வருவது
நீ தான்..
அன்று
புரிந்தது நீயே
என் அன்பு காதலன் என்று..

No comments: